வினோத சிவலிங்கங்கள்

Tuesday, October 17, 2006

வினோத சிவலிங்கங்கள்

வினோத சிவலிங்கங்களும் சிவாலயங்களும்

1001 சிறுலிங்கங்கள் கொண்ட சகஸ்ர லிங்கம் இராமநாதபுரம் மாவட்டம் ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படும் திருஉத்ரகோசமங்கையில் உள்ளது.

திருவாடானை அருகில் திருவெற்றியூர் அ.மி வன்மீகநாதர் பாகம்பிரியாள் ஆலயத்தில் இருக்கும் லிங்கத்தில் சக்தியின் வடிவமும் சேர்ந்து இருப்பதால் அன்னை பாகம்பிரியாள் என்று அழைக்கப்பட்டாள். இங்கு சுவாமி அம்மன் இருவருக்கும் இருஅர்ச்சனைகள் சேர்ந்தே செய்கிறர்கள்.

குடந்தை பட்டீஸ்வரம் அருகில் திருச்சக்திமுற்றம் என்ற தலத்து இறைவன் அ.மி சக்திவனேஸ்வரரை அன்னை ஸபியநாயகி தழுவிய கோலததில் இருப்பதால் இறவைர் தவழகுழைந்த நாதர்(சக்திதழுவிய நாதர்) என்றும் தஞ்சை-பாபநாசம் அருகில் இருக்கும் திருநல்லுர் ஈசன் தினமும் ஐந்துமுறை நிறம் மாறுவதால் பஞ்சவர்ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறர். இத்தலத்தில் இறைவன் திருநாவுக்கரசருக்கு தன் திருவடிசுடீட்டியதால் இங்குவரும் பக்தர்களுக்கு சிவன்திருவடி பதித்த சடாரி சுடீட்டபடுகிறது.

மயிலாடுதுறை அருகில் திருநீடுர் என்ற திருத்தலத்தில் உறையும் இறைவன் சோமநாதரை நண்டு வனங்கியதால் லிங்கம் நண்டு வளையுடன் காணப்படுகிறது.

நாகை மாவட்டம் திருப்புன்கூர் மற்றும் ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை) தலங்களில் லிங்கத்திற்கு பதிலாக செப்புக்குவளை கவசமாக சாற்றப்பட்டுள்ளது.


இராமநாதபுரம் மாவட்டம் திருப்புனவயல் என்ற தலத்து லிங்கத்தைவிட ஆவுடையார் பெரியது. ஆகவே லிங்கத்திற்கு 3முழம் வேட்டியும் ஆவுடையாருக்கு 30முழம் வேட்டியும் சுற்றப்படுகிறது. மூன்று முழமும் ஒருசுற்று முப்பது முழமும் ஒருசுற்று என்பது வழக்கு மொழியில் அழைக்கப்படுகிறது.




திருக்கருகாவூர் அ.மி கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லைவன நாதர் ஆலயத்து மூலவர் சுயம்புதிருமேனி மீது முல்லைக்கொடிபடர்ந்து இருந்ததாக வரலாறு. இன்றும் முல்லையின் வடு உள்ளதால் இறைவன் முல்லைவன நாதர் என்று அழைக்கப்படுகிறகுர்.

குடந்தை-காரைக்கால் மார்க்கத்தில் இருக்கும் திருநீலக்குடி மூலவர் அ.மி.நீலகண்டேஸ்வரருக்கு எண்ணெய் அபிஙூமூகம் சிறப்பு. எவ்வளவு எண்ணெய் அபிஙூமூகம் செய்தாலும் பாணத்திற்குள்ளே இழுத்துக்கொள்ளும். இங்கு அம்பாளே ஈசனுக்கு அபிஙூமூகம் செய்வதாக வரலாறு.

திருக்கானப்பேர் என்றழைக்கப்படும் காளையார் கோவிலில் மூலவருக்கு மூன்று சந்நிதிகள் - காளீஸர் சோமேசர் மற்றும் சொக்கேசர் ஆகியோர்

காஞசிபுரம் அ.மி.திருமேற்றளி நாதர் ஆலயத்தில் இரண்டு சந்நிதிகள்
ஒன்று ஓதஉருகீசர் மற்றெகுன்று திருமேற்றளிஈசர்-விமூ;னு ுபத்திலிருந்து சம்பந்தர் பாடலால் இலிங்க ுபம் பெற்ற தலம்.

காஞ்சி-பெருங்காட்ூர் அருகில் இருக்கும் திருப்பனங்காட்ூர் தலத்தில் பனங்காட்டீஸர் மற்றும் கிருபாநாதேசுவரர் என்ற இரண்டு சுவாமி சந்நிதிகளும் அமுதவல்லி-கிருபாநாயகி என்ற இரண்டு அம்மன் சந்நிதிகளும் உள்ளன.

திருக்காளத்தி இறைவன் அ.மி காளாத்தீஸ்வரர் சந்நிதியில் எஞிசியும் தீபம் காற்றினால் மோதப்பட்டதுபோல் எக்காலமும் அசைந்து கொண்டிருக்கும்.

சிவசர்மன் என்ற பாலபக்தனின் பூஷைக்காகவேண்டி தம்திருமுடி வளைத்து ஏற்றுக்கொண்டதால் திருவிஞிசிஞ்சிபுரத்து இறைவன் அ.மி.மார்க்பந்தீஸ்வரர் திருமேனி சற்று வளைந்துகாணப்படுகிறது.

திருப்பனந்தாள் இலிங்கத்திருமேனி தாடகை என்னும் பக்தையின் அன்பை வெளிப்படுத்த சாய்ந்த திருமேனியானது. மன்னர் யானயைக்கொண்டு அதனை நிமிர்தமுடியாமல்போகவேஇ குங்கிலியக்கலய நாயனார் அன்பின் மிகுதியால் மலர்மாலையால் சாய்ந்திருந்த திருமேனியை தன் கழுத்தையும் பிணித்து நிமிரச்செய்தார்

திருபாம்புரம் அ.மி.வண்டுசேர்குழலி சமேத பாம்புரநாதர் திருமேனியில் ஞாயிறு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாகபாம்புகள் நாகவழிபாட்டை மேற்கொள்வதாகவும் அந்தநேரத்தில் மல்லிகை தாழம்பூ நறுமனம் வீசுவதாக செவிவழி செய்திகள் கூறபட்டாலும்
கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 21ம் நாள் இறைவன் திருமேனிமீது பாம்பு தனது சட்டையை அணிவித்துஇருப்பதை பலர் கண்ணடீற்றுள்ளனர்.

மயிலாடுதுறை அருகில் திருவாளப்புத்துர் என்ற தலத்தில் திருமால் மாணிக்க லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டதால் இத்தலத்து இறைவன் மாணிக்கவணேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

திருவாடானை தலத்தில் சுகுசியன் நீலஇரத்தின லிங்கத்தை ஸதாபித்து வழிபட்டதால் இத்தலத்து இறைவன் ஆதிரத்திணேஸ்வரர் ஆனார்.

திருஇடைச்சரம் - திருவடிச்சுடீலம் மூலவர் இடைச்சுர நாதர் மரகத (பச்சைக்கல்) லிங்கத்திலானாவர்.

1 Comments:

At 2:37 AM, Blogger N.D. NATARAJA DEEKSHIDHAR said...

அருமையான தகல்வல்கள். மிக்க நன்றி.
நி.த. நடராஜ தீக்ஷிதர்
அடியேனின் ப்ளாக்கையும் கண்டு கருத்துக்கூறுங்கள்.
www.natarajadeekshidhar.blogspot.com

 

Post a Comment

<< Home